Wednesday, 19 June 2013

கொஞ்சம் சிரியுங்கள்


************** 
மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் 
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து 
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு… 

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் 
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு. 

************ 
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி… 
தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது…. 

************ 

அம்மா: என்னடா… இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே? 

பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன். 
அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க? 

பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க. 

************ 

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு? 

கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு. 

************ 

கணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு! கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது… 
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்! 
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன? 
மனைவி: அது என்னோட லவர்! 
கணவன்: ?!?….. 
******************** 
எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது? 

ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க? 

நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா. 

கார் ஓட்டி பாரேன்.


No comments:

Post a Comment